குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்தமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை மற்றும் பணமோசடி செய்தமை சட்டவிரோதமானது எனக் கூறி ஷாபி ஷிஹாப்தீன் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.