follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுசிறுவர்கள் மத்தியில் இன்புளுன்சா பரவும் அபாயம்

சிறுவர்கள் மத்தியில் இன்புளுன்சா பரவும் அபாயம்

Published on

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சளி காய்ச்சல் இருமல் அல்லது சுவாசிப்பதில் பிரச்சினை போன்றவற்றால் சிறுவாகள் பாதிக்கப்பட்டிருந்தால் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என தெரிவித்துள்ளார்.

இன்புளுன்சா வைரஸ் பாடசாலைகள் தனியார் வகுப்புகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வேகமாக பரவுகின்றது என அவர் எச்சரித்துள்ளார்.

சிறுவர்களிடம் இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவை வேகமாக ஏனைய குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் பரவலாம் எனவும் நோய் அறிகுறிகள் தென்படும் சிறுவர்களை வீடுகளிலேயே வைத்திருந்து மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பரசிட்டமோலை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவர்கள் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டால் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும், அவர்கள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...

ஹர்ஷன சூரியப்பெரும பா.உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு...