follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசிறுவர்கள் மத்தியில் இன்புளுன்சா பரவும் அபாயம்

சிறுவர்கள் மத்தியில் இன்புளுன்சா பரவும் அபாயம்

Published on

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சளி காய்ச்சல் இருமல் அல்லது சுவாசிப்பதில் பிரச்சினை போன்றவற்றால் சிறுவாகள் பாதிக்கப்பட்டிருந்தால் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என தெரிவித்துள்ளார்.

இன்புளுன்சா வைரஸ் பாடசாலைகள் தனியார் வகுப்புகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வேகமாக பரவுகின்றது என அவர் எச்சரித்துள்ளார்.

சிறுவர்களிடம் இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவை வேகமாக ஏனைய குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் பரவலாம் எனவும் நோய் அறிகுறிகள் தென்படும் சிறுவர்களை வீடுகளிலேயே வைத்திருந்து மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பரசிட்டமோலை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவர்கள் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டால் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும், அவர்கள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...