follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசிறுவர்கள் மத்தியில் இன்புளுன்சா பரவும் அபாயம்

சிறுவர்கள் மத்தியில் இன்புளுன்சா பரவும் அபாயம்

Published on

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சளி காய்ச்சல் இருமல் அல்லது சுவாசிப்பதில் பிரச்சினை போன்றவற்றால் சிறுவாகள் பாதிக்கப்பட்டிருந்தால் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என தெரிவித்துள்ளார்.

இன்புளுன்சா வைரஸ் பாடசாலைகள் தனியார் வகுப்புகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வேகமாக பரவுகின்றது என அவர் எச்சரித்துள்ளார்.

சிறுவர்களிடம் இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவை வேகமாக ஏனைய குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் பரவலாம் எனவும் நோய் அறிகுறிகள் தென்படும் சிறுவர்களை வீடுகளிலேயே வைத்திருந்து மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பரசிட்டமோலை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவர்கள் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டால் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும், அவர்கள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...