கடந்த 2023 மே 18ஆந் திகதி கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்பட்ட இலங்கையில் கடந்த கால மோதல்கள் தொடர்பான மூர்க்கத்தனமான இனப்படுகொலைக் கூற்றுக்கள் அடங்கிய அறிக்கையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தடையின்றி நிராகரிக்கின்றது. ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு ரீதியான அறிவிப்புக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் அமைதியின்மையையும் வெறுப்பையும் வளர்க்கின்றது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.