follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகுழந்தை போஷாக்கு - தாயின் ஊட்டச்சத்து இரண்டிற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்

குழந்தை போஷாக்கு – தாயின் ஊட்டச்சத்து இரண்டிற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்

Published on

சிறுவர் போஷாக்கின்மையும் தாய் ஊட்டச்சத்தின்மையும் இரண்டல்ல இரண்டையும் ஒன்றாக கருத வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குழந்தையின் போஷாக்கு மற்றும் தாயின் ஊட்டச்சத்தை தனித்தனியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இரண்டிற்குமே முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வீட்டு அலகுகளுக்குள் பெண்களை மையமாகக் கொண்ட தலையீடு மிகவும் அவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மறுபுறம் குடும்ப சுகாதார அலுவலர்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக்(விசேட) குழுக் கூட்டத்தில் இன்றைய(24) தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...