follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுநானோ திரவ உரம் இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குழு

நானோ திரவ உரம் இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குழு

Published on

2021 பருவத்தில் நெல் பயிரிடுவதற்காக நானோ திரவ உரங்களை இறக்குமதி செய்யும் போது கலப்படம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய, அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலின் பேரில் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சீன கரிம உரக் கப்பலுக்கு பணம் செலுத்தியமை மற்றும் நானோ உரம் இறக்குமதி ஆகிய இரண்டும் நாட்டின் விவசாயத்திற்கு பயனளிக்காத இரண்டு நடவடிக்கைகள் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நானோ உரம் இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்த மனுக்கள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு விரிவான விசாரணையை ஆரம்பிக்க அமைச்சரவையின் அனுமதியின் பேரில் உரிய குழு நியமிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...