follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1இ.போ.சபையில் 800 சாரதி, நடத்துனர் வெற்றிடங்கள்

இ.போ.சபையில் 800 சாரதி, நடத்துனர் வெற்றிடங்கள்

Published on

இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 26,561 ஆகும். சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் அனுமதியின் பேரில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என சபையின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தரம் எட்டாவது தேர்ச்சி பெற்றவர்கள் டிப்போ மேலாளர்களாக மாறியுள்ளதாகவும், கணக்கு, டெக்னிக்கல் உள்ளிட்ட பல பதவிகளில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சில தகுதியற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் தேர்தலின் பின்னர் டிப்போ நிர்வாகம் உள்ளிட்ட உயர் பதவிகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக அரசியல் தலையீடுகளைத் தடுப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...