follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பரீட்சை தொடர்பில் சிக்கல் இருப்பின் அழைக்க அவசர தொ.இலக்கங்கள்

பரீட்சை தொடர்பில் சிக்கல் இருப்பின் அழைக்க அவசர தொ.இலக்கங்கள்

Published on

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2022 (2023) பரீட்சை தொடர்பான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் விஜேசுந்தர அனைத்து அதிபர்களிடமும் கேட்டுக் கொள்கிறார்.

எக்காரணம் கொண்டும் பரீட்சார்த்திகளிடம் பரீட்சைக்கான சீட்டுக்களை அதிபர்கள் தடுத்து வைக்கக் கூடாது எனவும், ஏதேனும் காரணத்தினால் நுழைவுச் சீட்டுகளை தடுத்து வைத்து பரீட்சாத்திக்கு பரீட்சைக்குத் தோற்ற முடியாதிருந்தால் அதற்கு அதிபரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை 3,568 மையங்களில் நடத்த பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சை அட்டவணையை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112784208, 0112784537, 0112785922, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...