மீண்டும் தாயகம் திரும்பவுள்ள “சக் சுரின்”

803

இருபது வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ‘சக் சுரின்’ என்ற யானை நோய்வாய்ப்பட்டு மோசமான உடல் நிலைமையை கொண்டிருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் மீண்டும் தாய்லாந்திற்கு திரும்பவுள்ளது.

இதற்காக விமான ஏற்பாடுகள் முடிந்த பிறகு ரஷ்ய விமானம் ஒன்றில் ஜூலை முதலாம் திகதியன்று சக் சுரின் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.

முன்னதாக நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தாய்லாந்து கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

இதன்போது சங்கிலியால் பிணைக்கப்பட்டு நிகழ்வுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் இந்த யானை நோய்வாய்ப்பட்டதாக குறித்த மருத்துவக்குழு கண்டறிந்து அதனை சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் பரிந்துரையை செய்திருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here