follow the truth

follow the truth

June, 23, 2025
Homeஉள்நாடுமீண்டும் தாயகம் திரும்பவுள்ள "சக் சுரின்"

மீண்டும் தாயகம் திரும்பவுள்ள “சக் சுரின்”

Published on

இருபது வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ‘சக் சுரின்’ என்ற யானை நோய்வாய்ப்பட்டு மோசமான உடல் நிலைமையை கொண்டிருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் மீண்டும் தாய்லாந்திற்கு திரும்பவுள்ளது.

இதற்காக விமான ஏற்பாடுகள் முடிந்த பிறகு ரஷ்ய விமானம் ஒன்றில் ஜூலை முதலாம் திகதியன்று சக் சுரின் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.

முன்னதாக நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தாய்லாந்து கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

இதன்போது சங்கிலியால் பிணைக்கப்பட்டு நிகழ்வுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் இந்த யானை நோய்வாய்ப்பட்டதாக குறித்த மருத்துவக்குழு கண்டறிந்து அதனை சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் பரிந்துரையை செய்திருந்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம் மேற்கொண்டனர். அவர்கள் ஜூன் 27...

இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வந்தடைந்தார். அவர் ஜூன் 26 வரை இலங்கைக்கான...

கொலன்னாவ வெள்ளக் கட்டுப்பாடு – நியமிக்கப்பட்ட குழுவுடன் கலந்துரையாடல்

கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, பிரதமர் ஹரினி அமரசூரிய அலரிமாளிகையில் கூடியது. கொலன்னாவை...