follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

Published on

மிஹிந்தலை, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையை மையமாக கொண்டு இவ்வருட தேசிய பொசன் விழாவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பொசன் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொசன் வாரம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் விசேட புகையிரத பயணங்களை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, புறக்கோட்டையில் ஜெயாவில் இருந்து அனுராதபுரம் வரை தற்போதுள்ள 10 ரயில் பயணங்களுக்கு மேலதிகமாக மேலும் 10 புதிய ரயில்கள் சேவையில் இணைக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், இந்த வருடம் பொசன் பண்டிகையின் போது 400 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வடமத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என்பன தெரிவிக்கின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...