இன்று (28) பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறிவித்தலின் அடிப்படையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் – மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை – ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.