வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை

648

இன்று (28) பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அறிவித்தலின் அடிப்படையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் – மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை – ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here