ஆப்கானிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுதவிர, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.