பரீட்சாரத்திகளுக்காக தடையின்றி பஸ்கள் இயங்கும்

219

நாளை(29) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக சிசுசெரிய பேருந்து சேவையை முன்னெடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

சிசுசெரிய சேவையில் ஈடுபடும் சகல பேருந்து பணியாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை முடியும் வரையில், இந்த பேருந்து சேவையை தொடருமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை (29) ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்காக தடையின்றி பஸ்கள் இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை சீருடையில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன பஸ் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here