எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருட சிறைத்தண்டனை

216

எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மோரிசியோ பூன்ஸ் (Mauricio Funes) மற்றும் அவரது நீதி அமைச்சர் ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக எல் சல்வடோர் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதிக்கு 14 ஆண்டுகளும் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் (David Munguia) விற்கு 18 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here