களனிவெளி புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான கூட்டுத் திட்டத்தை விரைவாக தயாரிக்குமாறு புகையிரத திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.