தற்போதைய கடும் வெப்பமான காலநிலை மற்றும் கடுமையான சூரிய ஒளியால் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதால், மக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பம் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (30) அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக சூரிய ஒளியுடன் உடலில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் விழுவதால் கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.