தாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற ஜோடி கைது

5442

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் ஜோடி சுவரின் ஒரு பகுதியை சேதப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(30) மாலை தாமரை கோபுரத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தின் சுவரில் ஒரு பகுதியில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அமுல்படுத்தப்படும் என கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here