follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொரோனா பாதுகாப்பு உடைகள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியத்தில் தீ

கொரோனா பாதுகாப்பு உடைகள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியத்தில் தீ

Published on

பாணந்துறை கிரிபெரியவில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் உள்ள களஞ்சியசாலையில் கொரோனா உடைகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க ஹொரண களுத்துறை மொரட்டுவ மற்றும் தெஹிவளை மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவுகள் அழைக்கப்பட்டன.

கொரோனா உடைகள், முகமூடிகள், சத்திரசிகிச்சையின் போது அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல சுகாதார உபகரணங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் உட்பட 11 தண்ணீர் பவுசர்கள் மற்றும் முப்பது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தின் போது கட்டிடத்திற்குள் எவரும் இருக்கவில்லை எனவும், தீ விபத்து தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...