களுத்துறை மக்களுக்கு அவசர அறிவிப்பு

956

களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் அடுத்த சில மணித்தியாலங்களில் களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

குக்குலே கங்கை அனல்மின் நிலையத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (02) காலை திறக்கப்பட்டுள்ளன.

கலவான – பதுரலிய வீதியில் மிடலான மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு பி.எஸ் சந்தி, அகலவத்த கூடலிகம வீதியின் துல் எல்ல பிரதேசம், வலல்லாவிட்ட அவிட்டாவ வீதியின் தோட்டா ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here