follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது

Published on

சமையல் எரிவாயு விலை குறைவினால் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நிவாரணம் கிடைக்காது என்பதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறினார்.

எரிவாயுவைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் பேக்கரிகளில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவான பேக்கரிகள் இருப்பதாகவும், மீதமுள்ள பேக்கரிகள் அனைத்தும் டீசல், விறகு மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், ஒட்டுமொத்த பொருட்களின் விலையை குறைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் அறிக்கை விடுத்துள்ள போதிலும், எரிவாயு விலை அதிகரிப்பின் அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலைகளை சங்கம் ஒருபோதும் அதிகரிக்கவில்லை எனவும் தலைவர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்

மத்திய காசாவில் உள்ள நகர் ஒன்றில், ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது...

“சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெல்லும்” – கெஹெலிய

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல...

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கும் எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு...