யானை – மனித மோதலின் அவலத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.*
அண்மையில் மஹியங்கனை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்த போது அப்பகுதிகளில் காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதை காணக்கிடைத்ததாகவும், குறித்த பகுதிகளில் மின்சார வேலி அமைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக அமைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே,யானை – மனித மோதலால் இப்பகுதிகளில் மனித ஜீவனோபாயத்திற்கு எவ்வளவு சேதம் விளைவிக்கின்றன என்பதை அறிய, குறித்த பகுதிகளை பார்வையிட விஜயம் செய்யுமாறும், குறித்த பிரதேசங்களிலுள்ள வனஜீவராசிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சார வேலியை விரைவில் அமைத்துக் கொடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(06)பாராளுமன்றத்தில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.