2023 ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தம் 220 மோட்டார் சைக்கிள் சாரதிகள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் மொத்தம் 709 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முதல் நான்கு மாதங்களில் மொத்தம் 8,202 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
இந்த வருடத்தில் அதிகளவான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.