ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் நாட்டின் வெளிநாட்டு கடன் தொடர்பாகவும் கலந்துரையாடுவார் என அமைச்சர் தெரிவித்தார்.