மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழப்பு

347

கொடக்கவெல – மாதம்பே வடக்கு பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (16) இரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடக்கவெல பிரதேச செயலாளர் அச்சினி பிரதீபா தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here