லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், லொத்தர் விற்பனையாளர்களுக்கான கட்டணத்தை (கொமிஷன்) அதிகரிப்பதற்கு இணக்கம் வௌியிடப்படவில்லை என அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்நிலையில், தமக்கான கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், ஜூலை 7ஆம் திகதி முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகுவதாக சங்கத்தின் பொது செயலாளர் பி. எஸ். எஸ். மாரசிங்க கூறியுள்ளார்.