follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநடத்துனர்கள் இன்றி பஸ் போக்குவரத்து

நடத்துனர்கள் இன்றி பஸ் போக்குவரத்து

Published on

அதிவேக வீதியில் இன்று(19) முதல் நடத்துனர்கள் இன்றி பஸ் போக்குவரத்து முன்னோடி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார்.

புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான நஷ்டத்தில் இயங்கும் டிப்போக்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 107 டிப்போக்களில் 40 டிப்போக்கள் தற்போது தொடர்ந்து நஷ்டத்தில் உள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலான டிப்போக்கள் கிராமப்புறங்களில் இருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

நஷ்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கு முன் நஷ்டமில்லாத சூழலை உருவாக்க இதுவரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரி, அந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...