அதிக விலைக்கு முட்டை விற்பனை – 5 லட்சம் ரூபாய் அபராதம்

955

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் இரண்டு கடைகளுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அதன்படி, குறித்த நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், மற்ற இரண்டு கடைகளுக்கு 1 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நுகர்வோர் அதிகாரசபையின் மாத்தறை மாவட்ட அலுவலகஅதிகாரிகளினால் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் குறித்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here