follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதிரிபோஷா வழங்கப்படாமைக்கான காரணம்

திரிபோஷா வழங்கப்படாமைக்கான காரணம்

Published on

6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கும் அரசின் திட்டம் சுமார் ஒரு வருடமாக முடங்கிக் கிடப்பதாக அரசின் குடும்ப நலச் சேவைகள் சங்கத் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

இதுகுறித்து அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நம் நாட்டில், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதங்களுக்கும் மேலான மற்றும் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் திரிபோஷா கொடுக்கப்பட வேண்டும்.

06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கு சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக திரிபோஷா வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று காலத்தில் கூட குழந்தைகளுக்கு திரிபோஷா கொடுக்கப்பட்டது.

சமீபத்தில் அப்லாடாக்சின் பிரச்சினை இருந்தது. சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரச்சினை என்றால் அதை அரசுதான் தீர்க்க வேண்டும் என அரசின் குடும்ப நலச் சேவைகள் சங்கத் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...