follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுகாலி முகத்திடல் யாசகர்கள் ரிதியகமவுக்கு

காலி முகத்திடல் யாசகர்கள் ரிதியகமவுக்கு

Published on

காலி முகத்திடல் பகுதியில் யாசகம் கேட்பவர்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகமும் பொலிஸாரும் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது காலி முகத்திடல் பகுதியில் சுமார் 150 பேர் கொண்ட யாசகம்கேட்பவர்கள் குழுவொன்று அங்கு இருப்பதாகவும் அதனால் மக்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக, அவர்களை ஹம்பாந்தோட்டை, ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை அவர்களின் பணியிடத்தின் போது தேவையான தங்குமிடங்களையும் உணவையும் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...