நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா வீதி மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியாவில்ல் இன்று (27) பெய்த கடும் மழை காரணமாக தியகல தப்லோவத்த பகுதியில் இருந்து பாறை ஒன்றும் மண்மேடு ஒன்றும் சரிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா வீதியை மூட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
வீதி புனரமைக்கப்படும் வரை, ஹட்டனில் இருந்து நோட்டன்பிரிட்ஜ் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹட்டனில் இருந்து காசல்ரீ, ஒஸ்போர்ன் ஊடாக வந்து நோட்டன்பிரிட்ஜ் ஊடாக செல்ல முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.