மின் கட்டண திருத்தம் குறித்து இன்று இறுதித் தீர்மானம்

613

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்று (30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில் தீர்மானிக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளதுடன், அது தொடர்பான முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான பணிகள் கடந்த 27ம் திகதி நிறைவடைந்ததாகவும், கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தற்போது ஆணையத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here