follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் மாற்றம்

Published on

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு,அதன் புதிய விலை 328 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 365 ரூபாய் ஆகும்.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் அதிகரித்து ரூபாய் 346 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைந்து 308 ரூபாவாக காணப்படுகிறது.

அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைந்து 236 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு இணையான எரிபொருள் விலைகளை இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றியமைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...