தாய்லாந்தின் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட முத்துராஜா யானை இன்று(01) இரவு மீண்டும் சிறப்பு விமானம் மூலம் தாய்நாட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
விலங்கியல் திணைக்களத்தின் மருத்துவக் குழுவினால் யானைக்கு 2 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.திலக் பிரேமகந்தா தெரிவித்தார்.
இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை அளுத்கம மலைக் கோவிலில் ஒப்படைக்கப்பட்டதுடன், யானை பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக விலங்கியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து தாய்லாந்து அரசாங்கத்தின் கவன ஈர்ப்பு ஏற்பட்டது.