கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு தொிவித்துள்ளது.
இதனடிப்படையில், மீன்பிடி நடவடிக்கைகளிலும், ஏற்படும் விபத்துக்களிலும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.