follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமண்மேடு சரிவு - பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை

மண்மேடு சரிவு – பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை

Published on

மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்கிலி தோட்டப்பகுதியில் இன்று காலை மண்மேட்டுடன் கூடிய கொங்கிறிட் கட்டிடம் வீட்டின் மீது சரிந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

இதன்போது உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், வீட்டு பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்ககைகள் தோட்ட நிர்வாகத்தினருடன் எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்கவும் திம்புள்ள பத்தனை கிராம அதிகாரியூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...