அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் தொடர்பில் இதுவரை சுமார் 6 லட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.