follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP1மேலும் இரண்டு தாய்லாந்து யானைகள் குறித்து கவனம்

மேலும் இரண்டு தாய்லாந்து யானைகள் குறித்து கவனம்

Published on

தாய்லாந்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் முத்துராஜா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யானையை மீட்டுத் தருமாறு நாட்டின் தேரர் ஒருவர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அந்நாட்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக இருபத்தி இரண்டு வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானையை கடந்த 2ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

நோய்வாய்ப்பட்ட யானைக்கு மேல் சிகிச்சை அந்நாட்டு அரசினால் அளிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27)...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

இந்தியாவின் உத்தரகண்டில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும்...