follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1இதுவரை 11 வெளிநாட்டவர்கள் கஞ்சா வளர்ப்புக்கு முதலீடு செய்ய விருப்பம்

இதுவரை 11 வெளிநாட்டவர்கள் கஞ்சா வளர்ப்புக்கு முதலீடு செய்ய விருப்பம்

Published on

கட்டுநாயக்க வர்த்தக மற்றும் முதலீட்டு வலயத்தில் (BOI) கஞ்சா வளர்ப்பு முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதுவரை 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் 5 பில்லியன் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் எனவும் முழு திட்டத்திற்கும் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கஞ்சா சாகுபடி முன்னோடித் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கைக்கு நல்ல பதிலை அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகத்தில் நேற்றுமுன்தினம் (ஜூலை 4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அதிகாரிகளுக்கிடையேயான மோதல்களால் இந்த திட்டம் அழிக்கப்பட்டது, ஆனால் இந்த முறை எந்த சூழ்நிலையிலும் தோல்வியடைய அனுமதிக்கப்படாது என்று அவர் வலியுறுத்தினார்.

புதிய முதலீட்டுத் திட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...