follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1நோயாளிகளை புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை

நோயாளிகளை புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை

Published on

சுகாதார அமைச்சின் அலட்சியத்தால் நோயாளியொருவர் பாதிக்கப்பட்டால், சாக்குப்போக்கு கூறாமல் நோயாளியின் வசதிக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை அல்லது பொய்மை குறித்து ஆராய்ந்து குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அவதானித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் அதிகபட்ச சுகாதாரம் மற்றும் நிவாரணம் கிடைக்கும் வகையில் இலவச சுகாதார சேவையை எந்தவித குறைப்புமின்றி பேணுவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான அபிலாஷை எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...