இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதிலும் இருந்து ஜூலை 6ஆம் திகதி வரை டெங்கு என சந்தேகிக்கப்படும் 50,801 பேர் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 50.1 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.