கதுருவெல, மண்ணம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடமத்திய மாகாண பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்குச் சென்ற பேருந்தொன்று மண்ணம்பிட்டிய பகுதியில் நேற்று (09) விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்செயலாளர் ஜே.ஜே.முரளிதனுக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.