வட இந்தியாவை புரட்டிப் போடும் மழை – 22 பேர் பலி

224

இந்திய வட மாநிலங்களில் கடும்மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப்பில் பல பகுதிகளில் மழை மீட்பு, நிவாரணப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்ககை முடங்கியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கடும் மழை தொடர்வதால் இமாச்சல பிரதேசத்தில் பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here