இலங்கை – இந்தியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை இன்று(11) சந்தித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பாக வெளிவிவகாரச் செயலாளர் வினய் மோகன் குவத்ராவுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
பரஸ்பர நன்மைக்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.