நம்பிக்கையில்லா தீர்மானத்தை முகம் கொடுக்க தயார்

319

எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முகம் கொடுக்க தான் தயாரென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சவாலுக்கு பயந்து பொறுப்பிலிருந்து விலகி தப்பியோடும் நபர் தான் அல்லவெனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குண்டசாலை தொகுதி குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே நேற்று (16) அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சுகாதாரத்துறை தொடர்பாக திட்டமிட்டு பொய் பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும் அவை அனைத்தையும் நிரூபிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here