மருந்துகளால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளினால் அண்மைக்காலமாக உயிரிழந்த நோயாளிகளின் மரணங்கள் உட்பட வைத்தியசாலை அமைப்பில் உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.