ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெப்பம் காரணமாக இத்தாலியில் 16 நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இ
வெப்பம் பற்றிய அளவீடுகள் தொடங்கப்பட்ட பின் கடந்த ஜூன் மாதம் தான் உலகின் அதிகபட்ச சராசரி வெப்பம் பதிவாகி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே ஜெரன் என பெயரிடப்பட்டுள்ள வெப்ப புயல் இத்தாலியை தாக்கி இருப்பதால் ரோம் நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குளிர்ந்த தண்ணீரை பீச்சியடிக்கும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இத்தாலியில் பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.