வெலிகந்த மற்றும் புனானிக்கு இடையிலான நாமல்கம புகையிரத கடவை எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வாகன போக்குவரத்துக்காக முற்றாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக 29ம் திகதி காலை 7 மணிக்கு மூடப்பட்டு 30ம் திகதி மாலை 4.30 மணிக்கு போக்குவரத்துக்கு திறக்கப்படும்.
இதன் காரணமாக அந்த இரண்டு நாட்களிலும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.