follow the truth

follow the truth

July, 24, 2025
HomeTOP1ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல் குறித்த சுற்றறிக்கையை மீளப்பெறாவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம்

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல் குறித்த சுற்றறிக்கையை மீளப்பெறாவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம்

Published on

ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய(25) தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

குறித்த சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி நேற்று(24) மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் கடந்த சனிக்கிழமை குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

திணைக்களத்தின் பிரதானிகளின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ அல்லது வழங்கவோ முடியாது என சுகாதார சேவையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்ட குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைப்பு

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய செயல்முறைகள் வருமாறு நடைபெறுகின்றன: 🔹 முற்பகல் 9.30 - 10.00 பாராளுமன்ற நிலையியற்...

இன்று சில பகுதிகளில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...