follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1இன்று சில பகுதிகளில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்ப்பு

இன்று சில பகுதிகளில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்ப்பு

Published on

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 55-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளிலும், மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த...

விசேட சுற்றிவளைப்பில் 1,500 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து...

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்குமான விசேட அறிவித்தல்

சுற்றுலாப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் இணையம் வழியாக வங்கிகளை ஏமாற்றும் குழுக்களின் சமீபத்திய இலக்காக மாறிவிட்டதாக சட்டவிரோத சொத்துக்கள்...