follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2விசேட சுற்றிவளைப்பில் 1,500 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பில் 1,500 பேர் கைது

Published on

போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேற்று (24) சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நடவடிக்கைகளில் 7,100க்கும் மேற்பட்ட பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதன்போது 25,671 நபர்கள், 10,360 வாகனங்கள் மற்றும் 7,833 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,504 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 160 கிராம் 809 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 214 கிராம் 705 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த விசேட சோதனைகளின் போது, நேரடி குற்றங்களில் ஈடுபட்ட 22 நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 520 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 18 முதல் ஜூலை 24 வரை, 2.1 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், சுமார் 1.3 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 82 கிலோகிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...