போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேற்று (24) சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நடவடிக்கைகளில் 7,100க்கும் மேற்பட்ட பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன்போது 25,671 நபர்கள், 10,360 வாகனங்கள் மற்றும் 7,833 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,504 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 160 கிராம் 809 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 214 கிராம் 705 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த விசேட சோதனைகளின் போது, நேரடி குற்றங்களில் ஈடுபட்ட 22 நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 520 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 18 முதல் ஜூலை 24 வரை, 2.1 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், சுமார் 1.3 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 82 கிலோகிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.